states

img

சட்டமன்ற தேர்தலில் பாஜகவிற்கு மிகப்பெரிய தோல்வியை அளிக்க வேண்டும்

ராஞ்சி

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், பழங்குடி மக்களின் முக்கிய தலை வருமான சுபாஷ் முண்டா (34) நில அபகரிப்பை தடுத்ததற்காகவும், ராஞ்சி மாவட்டத்தில் வளர்ந்து வரும் சிபிஎம் செல்வாக்கை குறைக்கும் நோக்கத்திலும் ரியல் எஸ்டேட் குண்டர்களால் கடந்த ஆண்டு ஜூலை 26 அன்று துப்பாக்கி யால் சுட்டுக்கொலை செய்யப் பட்டார். சுபாஷ் முண்டா கொலை தொடர்பாக 7 பேர் கைது செய்யப் பட்டுள்ள நிலையில், தலைமறை வாக உள்ள உண்மை குற்றவாளி கள் இன்னும் கைது செய்யப்பட வில்லை.

இந்நிலையில், சுபாஷ் முண்டா வின் முதலாம் ஆண்டு நினைவு நாளான வெள்ளியன்று (ஜூலை 26)  ஜார்க்கண்டின் ராஞ்சி மாவட்டத் தில் உள்ள அவரது சொந்த ஊரான  தலதாலி கிராமத்தில்  நினைவேந் தல் நிகழ்வு அனுசரிக்கப்பட்டது. 

இந்த நிகழ்வுக்கு சிபிஎம் ஊழிய ரும், பஞ்சாயத்து தலைவருமான மதுவா காஷ்யப் தலைமை வகித் தார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க  தலைவருமான டாக்டர் அசோக் தாவ்லே, மாநில செயலாளரும் மத்தியக் குழு உறுப்பினருமான பிரகாஷ் விப்லவி, ஜேஎம்எம் கட்சியின் (ஹேமந்த் சோரன் கட்சி) மத்திய செயலாளர் நந்த் கிஷோர் மேத்தா, இந்திய ஜனநாயக வாலி பர் சங்க முன்னாள் பொதுச் செய லாளர் தபஸ் சின்ஹா, சுபாஷ் முண்டாவின் மனைவி கிருதி முண்டா, தந்தை லலித் முண்டா, தாய் சோட்டான் தேவி முண்டா மற்றும் அவரது குடும்பத்தினர், ஜோஹர் கட்சி தலைவர் விஜய் குஷ்வாஹா, பர்கா சமிதி ஜார்க்கண்ட் கட்சியின் தலைவர் அஜித் ஓரான், ஆதிவாசி சத்ரா சங்கத்தின் தலைவர் சுஷில் ஓரான், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்றனர்.  பொதுக்கூட்டத்தில், “பழங்குடி மக்களின் நலனுக்காக சுபாஷ் முண்டா தனது உயிரை தியாகம்  செய்துள்ளார்.  சுபாஷ் முண்டா வின் கொலைக்கு காரணம்  மாநி லத்தில் பல ஆண்டுகளாக பாஜக வால் உருவாக்கப்பட்ட வெறுப்பு  மற்றும் வகுப்புவாத வன்முறை சூழலும் தான். கடந்த மக்களவை தேர்தலில் பாஜக - தேசிய ஜன நாயக கூட்டணிக்கு கொடுத்த பின்னடைவை போல, வரவிருக் கும் ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்த லில் பாஜகவிற்கு மக்களவை தேர்தல் போல் அல்லாமல் இன் னும் மிகப்பெரிய தோல்வியை கொடுக்க வேண்டும். 

இதற்கு  சிபிஎம் கட்சியை பலப் படுத்த வேண்டும்” என ஜார்க் கண்ட் மக்களுக்கு சிபிஎம் தலை வர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

பேரணி...

நினைவேந்தல்  நிகழ்வுக்கு  முன்னதாக ராஞ்சி ரிங் ரோட்டில் உள்ள சுபாஷ் முண்டாவின் சிலைக்கு சிபிஎம் தலைவர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கணக் கானோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதன்பின், பேர ணியாக நினைவேந்தல் கூட்டம் நடைபெறும் கிராமத்திற்குசென்றனர்.

ஆகஸ்ட் 28இல் போராட்டம்

சுபாஷ் முண்டாவின் முக்கிய கொலையாளிகள் மற்றும் அவர்களுக்குப் பின்னால்  மூளை யாக செயல்பட்டவர்களைக் கைது செய்யக் கோரியும்,  பழங்குடி யினரின் பிற கோரிக்கைகளுக்காக வும் ஆகஸ்ட் 28 அன்று ராஞ்சி  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரணியுடன் போராட்டம்  நடத்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.